search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
    X

    பொன்னேரி அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

    பொன்னேரி அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே கல்லூர் கிராமம் உள்ளது. இங்கு இருக்கும் காளி அம்மன் கோவிலில் கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள். நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூட்டப்பட்டது.

    இன்று காலை, கோவிலுக்கு சாமி கும்பிட சிலர் சென்றனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது.

    கோவில் இருந்த குத்து விளக்கு, வெள்ளி பூஜை பொருட்கள், பட்டுப் புடவைகள், ஆம்ளிப்பர், ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×