search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழை  எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
    X

    கனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #NorthEastMonsoon
    திருவாரூர்:

    தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவி வருகிறது.

    இதே போல் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.



    திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால், இந்த மூன்று மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #NorthEastMonsoon #SchoolClosed

    Next Story
    ×