search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வை நம்பி வந்தவர்கள் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது- ராஜேந்திரபாலாஜி பேச்சு
    X

    அ.தி.மு.க.வை நம்பி வந்தவர்கள் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது- ராஜேந்திரபாலாஜி பேச்சு

    அ.தி.மு.க.வை நம்பி வந்தவர்கள் வீழ்ந்தாக என்றைக்கும் சரித்திரம் கிடையாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். #ministerrajendrabalaji #admk

    காரியாபட்டி:

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் யூனியன் தலைவர் உருவப்படம் திறப்பு விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. ராதாகிருஷ்ணன் எம்பி, சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    காரியாபட்டி ஊராட்சி யில் பல்வேறு பொது சேவைகள் மூலம் பொதுமக்களின் நன் மதிப்பை பெற்ற மறைந்த முன்னாள் யூனியன் தலைவரின் படத்தைதிறந்து வைப்பதில் பெருமை அடைகிறோம்.

    அவர் தி.மு.க.வில் நீண்ட காலமாக பணியாற்றி தொடர்ந்து அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றினார். அ.தி.மு.க.வில் அவர் சேர்ந்த போது ஜெயலலிதா மிகவும் சந்தோசம் அடைந்தார். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த அவர், காரியாபட்டி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து நல்ல நிர்வாகத்தை கொடுத்துள்ளார்.

    அவர் மறைந்து விட்டாலும் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்.

    நான் நல்லவர்களை நல்லவர்கள் என்று கட்டாயம் சொல்வேன். நான் திருத்தங்கல் நகராட் சியில் துணை தலைவராக வெற்றிபெற்ற போது அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த தங்கப்பாண்டியன் இருந்தார்.

    அன்றைக்கு என் பதவியை பறிக்க வேண்டும் என்று தங்கப் பாண்டியனிடம் சிலர் கூறினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து எனக்கு ஆதரவாக இருந்தார்.

    தங்கப்பாண்டியன் உருவப்படத்தை திருத்தங்கல் நகராட்சியிலும், தற்போது காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நான்தான் திறந்து வைத்தேன்.

    எந்த இயக்கத்தில் இருப்பது என்பது முக்கியம் அல்ல. எப்படி செயலாற்றினோம் என்றுதான் பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வை நம்பி வந்தவர்கள் வீழ்ந்தாக என்றைக்கும் சரித்திரம் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார். #ministerrajendrabalaji #admk

    Next Story
    ×