என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்காட்லாந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்த கோவை வாலிபர்
Byமாலை மலர்1 Nov 2018 9:07 AM GMT (Updated: 1 Nov 2018 9:07 AM GMT)
கோவை வாலிபருக்கும், ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் கலாசாரப்படி கோவையில் திருமணம் நடந்தது.
வடவள்ளி:
கோவை பூண்டி அருகே உள்ள, செம்மேடு கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி- வெள்ளையம்மாள் தம்பதியரின் மகன் சிவகார்த்திகேயன்(33). எம்.எஸ்.சி., படித்துள்ளார். இவர் 2008-ல் ஸ்காட்லாந்தில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
இவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அலிஷியா டெய்லர் (26) என்பவரை 5 ஆண்டுகள் காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
அதன் படி பெற்றோர் விருப்பத்துடன் ஜூலை 27-ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து தன் பெற்றோர் முன்னிலையில், இந்து முறைப்படி திருமணம் செய்வதற்கு சிவகார்த்திகேயன் முடிவு செய்தார்.
கடந்த, 22-ந் தேதி ஸ்காட்லாந்திலிருந்து, இருவரும் கோவை வந்தனர். பின்னர் செம்மேடு முட்டம் நாகேஸ்வரர் கோவிலில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், சிவகார்த்திகேயன்-அலிஷியா டெய்லர் திருமணம் தமிழ் கலாசார படி எளிமையாக நடந்தது. இத்தம்பதிகள், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மீண்டும் ஸ்காட்லாந்து செல்ல உள்ளனர். #tamilnews
கோவை பூண்டி அருகே உள்ள, செம்மேடு கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி- வெள்ளையம்மாள் தம்பதியரின் மகன் சிவகார்த்திகேயன்(33). எம்.எஸ்.சி., படித்துள்ளார். இவர் 2008-ல் ஸ்காட்லாந்தில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
இவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அலிஷியா டெய்லர் (26) என்பவரை 5 ஆண்டுகள் காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
அதன் படி பெற்றோர் விருப்பத்துடன் ஜூலை 27-ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து தன் பெற்றோர் முன்னிலையில், இந்து முறைப்படி திருமணம் செய்வதற்கு சிவகார்த்திகேயன் முடிவு செய்தார்.
கடந்த, 22-ந் தேதி ஸ்காட்லாந்திலிருந்து, இருவரும் கோவை வந்தனர். பின்னர் செம்மேடு முட்டம் நாகேஸ்வரர் கோவிலில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், சிவகார்த்திகேயன்-அலிஷியா டெய்லர் திருமணம் தமிழ் கலாசார படி எளிமையாக நடந்தது. இத்தம்பதிகள், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மீண்டும் ஸ்காட்லாந்து செல்ல உள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X