search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் கலாசாரபடி திருமணம் செய்து கொண்ட சிவகார்த்திகேயன் -அலிஷியா டெய்லர்
    X
    தமிழ் கலாசாரபடி திருமணம் செய்து கொண்ட சிவகார்த்திகேயன் -அலிஷியா டெய்லர்

    ஸ்காட்லாந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்த கோவை வாலிபர்

    கோவை வாலிபருக்கும், ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் கலாசாரப்படி கோவையில் திருமணம் நடந்தது.
    வடவள்ளி:

    கோவை பூண்டி அருகே உள்ள, செம்மேடு கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி- வெள்ளையம்மாள் தம்பதியரின் மகன் சிவகார்த்திகேயன்(33). எம்.எஸ்.சி., படித்துள்ளார். இவர் 2008-ல் ஸ்காட்லாந்தில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

    இவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அலிஷியா டெய்லர் (26) என்பவரை 5 ஆண்டுகள் காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

    அதன் படி பெற்றோர் விருப்பத்துடன் ஜூலை 27-ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து தன் பெற்றோர் முன்னிலையில், இந்து முறைப்படி திருமணம் செய்வதற்கு சிவகார்த்திகேயன் முடிவு செய்தார்.

    கடந்த, 22-ந் தேதி ஸ்காட்லாந்திலிருந்து, இருவரும் கோவை வந்தனர். பின்னர் செம்மேடு முட்டம் நாகேஸ்வரர் கோவிலில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், சிவகார்த்திகேயன்-அலிஷியா டெய்லர் திருமணம் தமிழ் கலாசார படி எளிமையாக நடந்தது. இத்தம்பதிகள், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மீண்டும் ஸ்காட்லாந்து செல்ல உள்ளனர். #tamilnews
    Next Story
    ×