search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை
    X

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. #ChennaiRain
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க உள்ளது. அடுத்த 2 நாட்களுக்குள் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. 

    இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி வருகிறது.

    தாம்பரம், தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சூளைமேடு, ராயப்பேட்டை, போரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்தந்த பகுதிகள் குளிர்ந்துவருகின்றன. #ChennaiRain
    Next Story
    ×