search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது
    X

    திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது

    திண்டுக்கல் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை பகவதிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக்(வயது19). அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று 3 வயது சிறுமி இவரது கடைக்கு மிட்டாய் வாங்க வந்துள்ளார்.

    அந்த சிறுமியை நைசாக பேசி தனது வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மகளை காணாமல் தேடினர். நீண்டநேரத்திற்கு பின்பு வந்த சிறுமியின் உடலில் மாற்றம் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனை தொடர்ந்து அசோக்கை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    Next Story
    ×