என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணத்தில் காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது
Byமாலை மலர்31 Oct 2018 11:19 AM GMT (Updated: 31 Oct 2018 11:19 AM GMT)
அரக்கோணம் அருகே காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே கீழ்க்குப்பம், ஜவஹர் நகரை சேர்ந்த எட்வின் என்பவரின் மகள் சினேகா (வயது 19). இவரும், அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் டேனியல் என்ற அன்பழகனும் (21) காதலித்து வந்தனர். சினேகா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திருமணம் செய்யாமலேயே டேனியலுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் சினேகா கடந்த 26-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சினேகாவின் தாயார் கீதா, அரக்கோணம் டவுன் போலீசில் எனது மகள் சாவில் மர்மம் உள்ளது என்று புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
டேனியல் கடந்த சில மாதங்களாக நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று கூறி வந்து உள்ளார். அப்போது சினேகா, நான் உன்னை நம்பி வந்து உள்ளேன். நீ தற்போது பார்த்து வரும் வேலையை சரியாக பார்த்தாலே போதும் என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையேதகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சினேகா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சினேகாவை தற்கொலைக்கு தூண்டியதாக டேனியலை போலீசார் கைது செய்தனர். #tamilnews
அரக்கோணம் அருகே கீழ்க்குப்பம், ஜவஹர் நகரை சேர்ந்த எட்வின் என்பவரின் மகள் சினேகா (வயது 19). இவரும், அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் டேனியல் என்ற அன்பழகனும் (21) காதலித்து வந்தனர். சினேகா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திருமணம் செய்யாமலேயே டேனியலுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் சினேகா கடந்த 26-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சினேகாவின் தாயார் கீதா, அரக்கோணம் டவுன் போலீசில் எனது மகள் சாவில் மர்மம் உள்ளது என்று புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
டேனியல் கடந்த சில மாதங்களாக நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று கூறி வந்து உள்ளார். அப்போது சினேகா, நான் உன்னை நம்பி வந்து உள்ளேன். நீ தற்போது பார்த்து வரும் வேலையை சரியாக பார்த்தாலே போதும் என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையேதகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சினேகா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சினேகாவை தற்கொலைக்கு தூண்டியதாக டேனியலை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X