search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவருக்கு பன்றிக்காய்ச்சல்- தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    கல்லூரி மாணவருக்கு பன்றிக்காய்ச்சல்- தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    பரமக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #Swineflu
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள எல்லை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவா (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாகவே சிவாவுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.

    நிலைமை மோசமாகவே சிவாவை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிவாவுக்கு தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். #Swineflu
    Next Story
    ×