search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
    X

    கொடைக்கானல் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

    கொடைக்கானல் அருகே உள்ள கல்லக்கிணறு பகுதியில் விவசாய பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றதால் கவலையடைந்துள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரியூர், பெருங்கானல், பள்ளத்துகால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. குறிப்பாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    அவை தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் சில தினங்களாக 4 காட்டு யானைகள் கல்லக்கிணறு பகுதியில் புகுந்தது. நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டம் கல்லக்கிணறு பகுதியில் உள்ளன. அந்த தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, காபி போன்ற பயிர்களை சேதப்படுத்தின. காட்டு யானைகள் தொடர்ந்து இந்த பகுதியில் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×