என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவில் அருகே விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு
Byமாலை மலர்30 Oct 2018 6:18 PM GMT (Updated: 30 Oct 2018 6:18 PM GMT)
வெள்ளகோவில் அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு இருந்து ரூ.1 லட்சம் மற்றும் 3 பவுன் நகையை திருடிச்சென்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38) இவர் விவசாயம் செய்து வருகிறார். அத்துடன், வெள்ளகோவிலில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டி விட்டு முருகேசன் தனது ஒர்க்ஷாப்புக்கு சென்றுவிட்டார்.
இவரது மனைவி மகாதேவி குழந்தையுடன் கோவிலுக்கு சென்று விட்டார். ஒர்க்ஷாப் வேலை முடிந்து மாலை 3 மணிக்கு முருகேசன் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அப்போது வீட்டின் கதவு நெம்பி திறக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் உள்ளே சென்றுபார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 2 பவுன் வளையல், ½ பவுன் மோதிரம், ½ பவுன் தங்க காசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில், யாரோ மர்ம ஆசாமி வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து கதவு பூட்டை நெம்பி திறந்து உள்ளே சென்று, பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து, அங்கு இருந்த பணம், நகை ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தான் கூட்டுறவு வங்கியில் ரூ.85 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அந்த பணத்துடன் ரூ.15 ஆயிரம் சேர்த்து ரூ.1 லட்சத்தை பீரோவில் வைத்திருந்ததாக முருகேசன் கூறினார்.
இது தொடர்பான புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38) இவர் விவசாயம் செய்து வருகிறார். அத்துடன், வெள்ளகோவிலில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டி விட்டு முருகேசன் தனது ஒர்க்ஷாப்புக்கு சென்றுவிட்டார்.
இவரது மனைவி மகாதேவி குழந்தையுடன் கோவிலுக்கு சென்று விட்டார். ஒர்க்ஷாப் வேலை முடிந்து மாலை 3 மணிக்கு முருகேசன் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அப்போது வீட்டின் கதவு நெம்பி திறக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் உள்ளே சென்றுபார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 2 பவுன் வளையல், ½ பவுன் மோதிரம், ½ பவுன் தங்க காசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில், யாரோ மர்ம ஆசாமி வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து கதவு பூட்டை நெம்பி திறந்து உள்ளே சென்று, பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து, அங்கு இருந்த பணம், நகை ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தான் கூட்டுறவு வங்கியில் ரூ.85 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அந்த பணத்துடன் ரூ.15 ஆயிரம் சேர்த்து ரூ.1 லட்சத்தை பீரோவில் வைத்திருந்ததாக முருகேசன் கூறினார்.
இது தொடர்பான புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X