search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
    X

    சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    வீசாணம் ஊராட்சியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட கடகால்புதூர், ஒட்டக்குளம்புதூர், வீசாணம், மேற்கு தோட்டம், அருந்ததியர் தெரு, பால கருப்பணார் தெரு, வீனஸ்காலனி, சிவாஜி நகர், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் காலனி பகுதியில் சுமார் 3,500 பேர் வசித்து வருகிறோம்.

    எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 10 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு 10 குடம் குடிநீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் ஆகியும் குடிநீர் வரவில்லை. எனவே ஒரு குடம் குடிநீரை ரூ.7 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

    குறிப்பாக மேற்கு தோட்டம், ஜே.ஜே.நகர், சிவாஜி நகர், வீனஸ் காலனி, பாலகருப்பணார் தெரு, திருவள்ளுவர் காலனி பகுதிகளுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் வருவது இல்லை. எனவே வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். 
    Next Story
    ×