search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
    X

    கோத்தகிரியில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

    கோத்தகிரியில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜேஸ்குமாரின் மனைவி லோகேஸ்வரி (வயது 26). கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் உள்ள வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது 3 வயது மகன் கார்த்திகேயனும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார்.

    கொலையாளிகளை கைது செய்ய நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா குன்னூர் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டார். குன்னூர் டி.எஸ்.பி. கிருஷ்ணசாமி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக லோகேஸ்வரியின் செல்போன் எண்களை சோதனை செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆராய்ந்தனர்.

    கழுத்து அறுக்கப்பட்ட சிறுவன் கார்த்திகேயன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவனிடம் விசாரணை நடத்தினால் கொலையாளிகள் குறித்து விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் ஈரோட்டில் பதுங்கியிருந்த கொலையாளி ஒருவரை பிடித்து விட்டதாக தகவல்கள் பரவியது. #tamilnews
    Next Story
    ×