search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - டிரைவர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - டிரைவர் பலி

    அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எழில் அரசன் (வயது31). டிரைவர். நேற்று முன்தினம் இரவு எழில் அரசன் மோட்டார் சைக்கிளில் அரியலூருக்கு சென்று வீட்டிற்கு பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். செந்துறை ரவுண்டானா அருகே வந்த போது சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக எழில் அரசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே எழில் அரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எழில்அரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×