என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தமிழக அரசின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
குடியாத்தம்:
குடியாத்தத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தகுதி பெற்ற தலைவர்களாக உயர்ந்து வருகிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.
இடைத்தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார மையங்களில் பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படுகிற நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறேன். இதுவரை 21 மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எந்த இடத்திலும் அதிகாரிகள் டெங்கு மரணங்கள் நிகழ்ந்ததாக கூறவில்லை. முன்பு இருந்ததைவிட தற்போது அதிக அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் அதிகம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
தேர்தல் நெருங்கி வரும் போது கூட்டணி குறித்து பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்வார்கள். நிச்சயமாக பா.ஜ.க. வலுவான கூட்டணியை அமைக்கும். அந்த கூட்டணி தமிழகத்தில் அதிகப்படியான இடங்களை கைப்பற்றும். பா.ஜ.க. தலைமையில் கூட்டணியா அல்லது மற்ற கட்சிகள் தலைமையில் கூட்டணியா என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் முடிவு செய்யப்படும்.
பிரதமர் மோடி எந்த ஒரு நாட்டிற்கு சென்று வந்தாலும், அந்த நாட்டினால் இந்தியாவிற்கு பலன் கொடுக்கும் அளவில் உள்ளது. முன்பெல்லாம் கடன் வாங்க வெளிநாட்டிற்கு சென்றோம். இன்று வியாபாரங்களை பெருக்கவும், தொழில்களை தொடங்கவும் நாம் தயாராக உள்ளோம். இது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. உள்பட எந்த கட்சியாக இருந்தாலும் பா.ஜ.க. பெயரை சொல்லாமல் அரசியல் நடத்த முடியாது. தமிழக அரசின் செயல்பாடு முன்பைவிட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போதுதான் வளர்ச்சியின் உச்சத்தை தமிழகம் எட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்