search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட இரண்டரை டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
    X

    ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட இரண்டரை டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

    ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடத்தப்பட்ட இரண்டரை டன் அளவிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். #RedSandalwoodCaptured #Andhra
    வேலூர்:

    ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக வேலூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் சாத்துமதுரை என்ற பகுதியில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

    அப்போது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில், இரண்டரை டன் செம்மரக் கட்டைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வேலூர் தாலுக்கா போலீசார் உதவியுடன் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக கடத்திச் செல்லப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. #RedSandalwoodCaptured #Andhra
    Next Story
    ×