search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் இன்று பட்டாசு கடையில் தீ விபத்து
    X

    விழுப்புரத்தில் இன்று பட்டாசு கடையில் தீ விபத்து

    விழுப்புரத்தில் இன்று காலை பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் கருதி சேதமடைந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பகுதியில் உள்ள காமராஜர் வீதி மற்றும் குபேரன் வீதி இணையும் இடத்தில் தனியாருக்கு சொந்தமான புத்தகக்கடை உள்ளது. அந்த கடையின் உரிமையாளர் முறையான அனுமதி பெற்று அந்த கடையில் வைத்து பட்டாசு விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தனது குழந்தையுடன் பட்டாசு வாங்க வந்தார். பட்டாசுகளை வாங்கி கொண்டு கடையின் வெளியே சென்ற போது அந்த குழந்தை பட்டாசு ஒன்றை பற்ற வைக்குமாறு கூறி அடம் பிடித்து அழுதது. இதை தொடர்ந்து குழந்தையின் தந்தை பட்டாசை பற்றவைத்தார் .

    அப்போது பட்டாசில் இருந்து தீப்பொறி ஒன்று பறந்து அந்த பட்டாசு கடையில் விழுந்தது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதை பார்த்து கடையில் இருந்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடையில் இருந்து வேகமாக வெளியே ஓடிவந்தனர்.

    இதுகுறித்து விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு 2 வண்டிகளில் விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் கருதி சேதமடைந்தன.

    தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டது.

    Next Story
    ×