என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேர்தல் நிதிக்காக சால்வை, பூங்கொத்துக்கு பதில் பணம் கொடுங்கள்- திருநாவுக்கரசர் வேண்டுகோள்
சென்னை:
தமிழக காங்கிரஸ் பிற்பட்டோர் பிரிவு மாநில தலைவராக டி.ஏ.நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்திபவன் மைதானத்தில் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிற்பட் டோர் பிரிவின் மேலிட பொறுப்பாளர் ரோட்டாய் போசையா ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
பின்னர் திருநாவுக்கரசர் கூறும்போது, “ஒவ்வொரு பிரிவினரும் கட்சியை வலுப்படுத்தவும், வருகிற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமராக்க அனைவரும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும். மக்கள் விரோத பா.ஜனதா ஆட்சியை அகற்ற எல்லோரும் தயாராகி விட்டனர். மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் காங்கிரசார் கொண்டு சேர்க்க வேண்டும்.
தேர்தலுக்கு கட்சி தயாராகி வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளிலும், என்னை சந்திக்க வரும்போது பொன்னாடைகள், பூங்கொத்துகள் தருவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக கட்சிக்கு தேர்தல் நிதி வழங்குங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் குமரி அனந்தன், சிரஞ்சீவி, ஊர்வசி அமிர்தராஜ், கஜநாதன், எம்.எஸ்.திரவியம், பி.வி. தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #congress #election
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்