search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் நிதிக்காக சால்வை, பூங்கொத்துக்கு பதில் பணம் கொடுங்கள்- திருநாவுக்கரசர் வேண்டுகோள்
    X

    தேர்தல் நிதிக்காக சால்வை, பூங்கொத்துக்கு பதில் பணம் கொடுங்கள்- திருநாவுக்கரசர் வேண்டுகோள்

    என்னை சந்திக்க வரும்போது பொன்னாடைகள், பூங்கொத்துகள் தருவதை தவிர்த்து அதற்கு பதிலாக கட்சிக்கு தேர்தல் நிதி வழங்குங்கள் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #congress #election

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பிற்பட்டோர் பிரிவு மாநில தலைவராக டி.ஏ.நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்திபவன் மைதானத்தில் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிற்பட் டோர் பிரிவின் மேலிட பொறுப்பாளர் ரோட்டாய் போசையா ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    பின்னர் திருநாவுக்கரசர் கூறும்போது, “ஒவ்வொரு பிரிவினரும் கட்சியை வலுப்படுத்தவும், வருகிற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமராக்க அனைவரும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும். மக்கள் விரோத பா.ஜனதா ஆட்சியை அகற்ற எல்லோரும் தயாராகி விட்டனர். மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் காங்கிரசார் கொண்டு சேர்க்க வேண்டும்.

    தேர்தலுக்கு கட்சி தயாராகி வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளிலும், என்னை சந்திக்க வரும்போது பொன்னாடைகள், பூங்கொத்துகள் தருவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக கட்சிக்கு தேர்தல் நிதி வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குமரி அனந்தன், சிரஞ்சீவி, ஊர்வசி அமிர்தராஜ், கஜநாதன், எம்.எஸ்.திரவியம், பி.வி. தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar  #congress #election

    Next Story
    ×