search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தற்கொலை செய்த ஐ.ஏ.எஸ். மாணவி உடல் சத்தியமங்கலத்தில் தகனம்
    X

    டெல்லியில் தற்கொலை செய்த ஐ.ஏ.எஸ். மாணவி உடல் சத்தியமங்கலத்தில் தகனம்

    டெல்லியில் தற்கொலை செய்த ஐ.ஏ.எஸ். மாணவியின் உடல் இன்று அதிகாலை சத்தியமங்கலம் ஆலாம்பாளையத்துக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. #Student #commitsuicide

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளைத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவரது மகள் ஸ்ரீமதி (20).

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முடித்த மாணவி ஸ்ரீமதிக்கு கலெக்டர் ஆக விருப்பம் ஏற்பட்டது. மகளின் ஆசையை நிறைவேற்ற அவரது தந்தையும் அவரை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தார்.

    டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ஸ்ரீமதி ஐ.ஏ.எஸ். படித்து வந்தார். அருகே உள்ள விடுதியில் தங்கி இருந்தார். அவருடன் நெல்லையை சேர்ந்த ஒரு மாணவியும் தங்கி இருந்தார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதி தனது அறையில் தூக்குப்போட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார். உடன் இருந்த நெல்லை மாணவி தன் தோழி தற்கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


    போலீசார் மாணவி ஸ்ரீமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவியின் தற்கொலை செய்தி சத்தியமங்கலத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிககப்பட்டது. கதறி அழுதபடி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    அங்குள்ள மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். பெற்றோர் மற்றும் தனது தம்பி வருண்ஸ்ரீ மீது அதிக பாசம் கொண்ட ஸ்ரீமதிக்கு அவர்களை பிரிந்து தனியாக இருக்க முடியவில்லை. மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் படிப்பிலும் அவரால் அதிக ஆர்வம் காட்ட முடியவில்லை.

    இந்த நிலையில்தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மாணவியின் உடல் சத்தியமங்கலம் ஆலாம்பாளையத்துக்கு வந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்களும் ஊர்மக்களும் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

    ஸ்ரீமதி தற்கொலை செய்வதற்கு முன் பெற்றோருக்கு போன் செய்து உள்ளார். ‘‘தீபாவளிக்கு ஊருக்கு வருகிறேன்’’ என்று கூறினார்.

    அவரது உயிரற்ற உடலைப்பார்த்த உறவினர்கள் ‘‘தீபாவளிக்கு வருவேன் என்று சொன்னீயே இப்போது பிணமாக வந்துள்ளாயே’’ என்று கூறி கதறி அழுதனர். அவரது தந்தை ‘‘நீ ஆசைப்பட்டபடிதானே அம்மா ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தேன். இப்படி பார்க்கவா டெல்லிக்கு அனுப்பினேன்’’ என்று கதறி துடித்தார்.

    இந்த உருக்கமான காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை குளமக்கியது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அப்பகுதியில் மாணவி ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட்டது. #Student #commitsuicide

    Next Story
    ×