search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
    X

    ஊட்டியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

    ஊட்டியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார்.
    ஊட்டி:

    ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகே ஆர்.சி. காலனியை சேர்ந்தவர் சாதிக். அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பானு(வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 24-ந் தேதி பானுவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் அவரை உறவினர்கள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பானுவை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பானுவுக்கு மர்ம காய்ச்சல் அதிகரித்தது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஹிரியன் கூறியதாவது:-

    உயிரிழந்த பானுவுக்கு பன்றி காய்ச்சல் அல்லது டெங்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோய் முற்றிய பிறகே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் எந்த காரணத்தால் இறந்தார்? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் கோவை உள்ளிட்ட இடங்களில் பரவி வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×