என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கல்லுப்பட்டி அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி
பேரையூர்:
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டி. இவரது மகன் சிவமனோஜ் (வயது 25). இவர் டி.கல்லூபட்டி பி.ஆர்.நகரில் தங்கி செல்போன் டவர் பராமரிப்பு பணியை செய்து வந்தார். நேற்று சிவமனோஜ் மோட்டார் சைக்கிளில் வன்னி வேலாம்பட்டி விலக்கு பகுதியில் சென்றார்.
அப்போது மதுரையில் இருந்து ராஜபாளையம் சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் சிவமனோஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவ மனோஜ் பரிதாபமாக இறந்தார். டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளிக்குடி அருகே உள்ள மொச்சிகுளத்தை சேர்ந்த வர் ராமர் (வயது 60). இவர் காட்டுப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாடு சாலையை கடந்தது. அதனை பிடிக்க ராமர் சென்றபோது. அந்த வழியே வந்த கார் அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த ராமர், சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான காரை ஒட்டி வந்த மொச்சிகுளத்தை சேர்ந்த நெடுமாறனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்