search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணரப்பேட்டையில் மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
    X

    வாணரப்பேட்டையில் மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

    வாணரப்பேட்டையில் மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது45). இவர் கோவில் விழா நடைபெறும் இடங்களில் ராட்டினம் வைத்து பணம் சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மரியா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலிங்கத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மகாலிங்கத்தை மதுகுடிக்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனாலும் மகாலிங்கம் தொடர்ந்து மது குடித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மகாலிங்கம் வழக்கம் போல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மகாலிங்கத்தை அவரது மனைவி மரியா கண்டித்தார். இதனால் மனமுடைந்த மகாலிங்கம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் மாடிக்கு சென்ற அவர் அங்குள்ள கூரை கொட்டகையில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்துக்கு பிறகு மகாலிங்கத்தின் மாமனார் மாடிக்கு சென்ற போது அங்கு மருமகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து மகாலிங்கத்தை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×