என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாணரப்பேட்டையில் மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது45). இவர் கோவில் விழா நடைபெறும் இடங்களில் ராட்டினம் வைத்து பணம் சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மரியா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலிங்கத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மகாலிங்கத்தை மதுகுடிக்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனாலும் மகாலிங்கம் தொடர்ந்து மது குடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மகாலிங்கம் வழக்கம் போல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மகாலிங்கத்தை அவரது மனைவி மரியா கண்டித்தார். இதனால் மனமுடைந்த மகாலிங்கம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் மாடிக்கு சென்ற அவர் அங்குள்ள கூரை கொட்டகையில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்துக்கு பிறகு மகாலிங்கத்தின் மாமனார் மாடிக்கு சென்ற போது அங்கு மருமகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து மகாலிங்கத்தை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்