search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு குறைந்துள்ளது - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை
    X

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு குறைந்துள்ளது - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மூடப்பட்ட பிறகு அப்பகுதியில் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. #Sterlite #Airpollution
    சென்னை:

    தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறி ஆலையை சுற்றியுள்ள கிராமத்தினர் போராட்டம்  நடத்தினர்.
     
    இதற்கிடையே, ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டதால் போராட்டம் தீவிரமானது. கடந்த மே மாதம் பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடகோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போது வன்முறை வெடித்தது. 
    அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.  இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை பிறப்பித்தது.  இதையடுத்து ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
     
    இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மூடப்பட்ட பிறகு அப்பகுதியில் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவு பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் காற்று மாசு குறைந்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றின் தரம் தொடர்பான தரவு பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    தூத்துக்குடியில் காற்றின் தரம் பற்றிய தரவு பட்டியல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் காற்றில் சல்பர் டை ஆக்சைடு கணிசமாக குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  #Sterlite #Airpollution
    Next Story
    ×