search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் விபத்து - 2 வாலிபர்கள் பலி
    X

    செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் விபத்து - 2 வாலிபர்கள் பலி

    செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு, அக். 28-

    செங்கல்பட்டை அடுத்த கரும் பாக்கத்தை சேர்ந்த வர் சூர்யா (வயது 20). முள்ளிப் பாக்கம், புதுநக ரில் வசித்து வந்தவர் பிரதாப் (19). இருவரும் நண்பர்கள்.

    இன்று அதிகாலை 2 பேரும் ஒரு திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள ஒரே மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறு மாறாக ஓடி சாலையோர பனை மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சூர்யா வும், பிரதாப்பும் பலத்த காயம் அடைந்து உயி ருக்கு போராடினர். அவர் களைஅவ்வழியே சென்ற வர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பல னின்றி சூர்யாவும், பிரதாப் பும் பரிதாபமாக இறந்த னர். இது குறித்து செங்கல் பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×