என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்னவாசல் அருகே கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை
Byமாலை மலர்27 Oct 2018 4:54 PM GMT (Updated: 27 Oct 2018 4:54 PM GMT)
அன்னவாசல் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விராலிமலை:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் பிரீத்தா (வயது18). இவர் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இவர் கல்லூரி விடுமுறைக்கு சொந்த ஊரான பாப்பிரெட்டிபட்டிக்கு சென்று விட்டு மீண்டும் தனது தாயுடன் கல்லூரி விடுதிக்கு வந்தார்.
பின்னர் கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் மாலை விடுதிக்கு விரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி விடுதிகாப்பாளர் ராஜேந்திரன் பிரீத்தாவின் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து பிரீத்தாவின் தந்தை வெங்கடாசலம் அன்னவாசல் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தர்மபுரியை சேர்ந்த தேசிங்கு என்பவர் பிரீத்தியை கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X