search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னவாசல் அருகே கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை
    X

    அன்னவாசல் அருகே கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை

    அன்னவாசல் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விராலிமலை:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம்.  இவரது மகள் பிரீத்தா (வயது18). இவர் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இவர் கல்லூரி விடுமுறைக்கு சொந்த ஊரான பாப்பிரெட்டிபட்டிக்கு சென்று விட்டு மீண்டும் தனது தாயுடன் கல்லூரி விடுதிக்கு வந்தார்.  

    பின்னர் கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் மாலை விடுதிக்கு விரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி விடுதிகாப்பாளர் ராஜேந்திரன் பிரீத்தாவின் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். 

    இதனையடுத்து பிரீத்தாவின் தந்தை வெங்கடாசலம் அன்னவாசல் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தர்மபுரியை சேர்ந்த தேசிங்கு என்பவர் பிரீத்தியை கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    Next Story
    ×