search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி பலாத்காரம்- 15 வயது சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை
    X

    சிறுமி பலாத்காரம்- 15 வயது சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை

    சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிறுவன குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இவர் கடந்த 2016-ம் வீட்டின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ராமநாதபுரம் போலீசார் 13 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பின்னர் சிறுவன் ஜாமீனில் வெளியே வந்தான்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிறுவர்களுக்கான விசாரணை ஆணையத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சிறுவன் மீண்டும் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

    Next Story
    ×