search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை பெரிய மார்க்கெட்டில் நூதன முறையில் போலி லாட்டரி விற்றவர் கைது
    X

    புதுவை பெரிய மார்க்கெட்டில் நூதன முறையில் போலி லாட்டரி விற்றவர் கைது

    பெரிய மார்க்கெட்டில் நூதன முறையில் போலி லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி லாட்டரியை முற்றிலும் ஒழிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவை ஏற்று கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் போலி லாட்டரி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற் கொண்டு செய்து வருகிறார்.

    நேற்று ஒதியஞ்சாலை பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் பெரிய மார்க்கெட்டில் நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் குலுக்கலில் ஒரு நம்பர் விழுந்தால் ரூ.50-ம், 2 நம்பர் விழுந்தால் ரூ. 500-ம், 3 நம்பர் விழுந்தால் ரூ.13 ஆயிரம் பரிசு தருவதாக ஒருவர் தினமும் பெரிய மார்க்கெட் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு மாறனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பெரிய மார்க்கெட்டில் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டனர்.

    அப்போது பூக்கடை பகுதியில் ஒருவர் கையில் துண்டு சீட்டுகளை வைத்து கொண்டு செல்போனில் பேசியபடி இருந்ததை போலீசார் கண்டனர்.

    அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் சிறு வியாபாரிகளுக்கு நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் அவர் கடலூரை சேர்ந்த சண்முகம் (வயது 43) என்பதும், அவர் தினமும் கடலூரில் இருந்து புதுவை பெரிய மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 நம்பர் போலி லாட்டரி சீட்டுகள், விற்பனை பணம் ரூ. 14,500 மற்றும் செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைது செய்தனர்.

    Next Story
    ×