என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சுரண்டை, கடையத்தில் தொழிலாளி- பெண் தற்கொலை
கடையம்:
கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 30) கூலி தொழிலாளி. இவரது மனைவி ரோசி. வினோத் சமீப காலமாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் ரெஜினா மற்றும் மனைவி ரோசி கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த வினோத் சம்பவத்தன்று விஷத்தை குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை சிவகுரு நாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 55). இவருக்கு புற்று நோய் வந்தது.
இதற்காக ஏராளமான மருந்துகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சீதாலட்சுமி நேற்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சுரண்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்