என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகிரி அருகே கார் மோதி விவசாயி பலி- டிரைவர் கைது
Byமாலை மலர்27 Oct 2018 11:14 AM GMT (Updated: 27 Oct 2018 11:14 AM GMT)
சிவகிரி அருகே நடுவை வேலைக்கு ஆட்கள் தேடி சென்ற விவசாயி கார் மோதி பலியான சம்பவம் குறித்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி:
புளியங்குடி நீர்பாய்ச்சிமாறன் தேருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 27). விவசாயி. இவர் தனது வயல் நடுவை வேலைக்கு ஆட்கள் அழைத்துவர நேற்று இரவு சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி பகுதிக்கு சென்றார்.
பின்னர் ஊர் திரும்புவதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார், பலியான கிருஷ்ணன் உடலை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஹரீஷ் (54) என்பவரை கைது செய்தனர்.
நடுவை வேலைக்கு ஆட்கள் தேடி சென்ற விவசாயி கார் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
புளியங்குடி நீர்பாய்ச்சிமாறன் தேருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 27). விவசாயி. இவர் தனது வயல் நடுவை வேலைக்கு ஆட்கள் அழைத்துவர நேற்று இரவு சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி பகுதிக்கு சென்றார்.
பின்னர் ஊர் திரும்புவதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார், பலியான கிருஷ்ணன் உடலை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஹரீஷ் (54) என்பவரை கைது செய்தனர்.
நடுவை வேலைக்கு ஆட்கள் தேடி சென்ற விவசாயி கார் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X