search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையில் தகராறு செய்த வாலிபர் கைது
    X

    கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையில் தகராறு செய்த வாலிபர் கைது

    கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே தேப்பெருமாள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதீர். இவரது மகன் சேட்டு என்கிற கமல் பாட்ஷா.

    நேற்று இரவு 10 மணிக்கு கமல்பாட்ஷா கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது ஊழியர்கள் கடையை அடைத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கமல்பாட்ஷா டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் மது கேட்டு கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் தர்மன் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கமல் பாட்ஷாவை கைது செய்தனர்.

    Next Story
    ×