search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டுக்குள் பிணமாக கிடந்த செல்லம்- ஞானம்மாள். (பழைய படம்).
    X
    வீட்டுக்குள் பிணமாக கிடந்த செல்லம்- ஞானம்மாள். (பழைய படம்).

    தக்கலை அருகே மகன்கள் கவனிக்காததால் உயிரிழந்த தம்பதி

    தக்கலை அருகே 2 மகன்கள் இருந்தும் முதுமையில் இருந்த பெற்றோரை அவர்கள் கவனிக்காததால், அழுகிய நிலையில் பெற்றோர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லம் (வயது 90). இவருடைய மனைவி ஞானம்மாள் (85). இவர்களது 3 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இதில் மூத்த மகன் சமீபத்தில் இறந்து விட்டார்.

    2-வது மகன் பொன்னப்பன் (50), குளச்சல் பகுதியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மற்றொரு மகன் பொன்னுச்சாமி (45) தக்கலை சாரோடு பகுதியில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

    பிள்ளைகள் தனித்தனியாக வசித்து வந்ததால் செல்லமும், ஞானம்மாளும் சாரோடு யானை சாஸ்தான் கோவில் அருகில் வயல்வெளியில் ஒரு வீடு அமைத்து வாழ்ந்து வந்தனர்.

    கடந்த சில ஆண்டுகளாக ஞானம்மாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். வயதான காலத்திலும் செல்லம் கூலி வேலைக்கு சென்று மனைவிக்கான மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவுகளை கவனித்து வந்தார். சில நாட்களாக செல்லத்துக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

    கணவன்-மனைவி இருவரும் வயது முதிர்வு மற்றும் உடல்நலம் பாதிப்பு காரணமாக வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் முடங்கினர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுக்கும் சிறு பணத்தை பெற்று கொண்டு ஏதாவது வாங்கி சாப்பிட்டு வந்தனர்.

    இதற்கிடையே செல்லம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவரது வீடு பூட்டியே கிடந்தது. நேற்று வீட்டில் கணவன்- மனைவி இருவரும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

    செல்லம் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. அதாவது செல்லம் இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே உடல்நலம் பாதிப்பால் படுத்த படுக்கையாக இருந்த ஞானம்மாள், கணவரது உடலை பார்த்தபடி கிடந்துள்ளார். கணவர் இறந்ததை அறிந்திருந்தும் அதனை வெளியே சொல்ல முடியாத நிலையில் அவரது உடல்நிலை இருந்துள்ளது. கணவரது உடலை பார்த்தபடியே ஞானம்மாளின் உயிரும் பிரிந்துள்ளது. இதுபோன்ற ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 மகன்களும் எங்களை கவனிக்கவில்லை என்று செல்லம் போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தார். அப்போது, 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பெற்றோரை ஒழுங்காக கவனிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி கவனிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே தாய், தந்தை பிணமாக கிடந்ததை கேள்விபட்டு அவரது மகன் பொன்னுசாமி அங்கு வந்தார். அப்போது, பெற்றோர் உயிருடன் இருக்கும் போது அவரை ஒழுங்காக பார்க்காமல், தற்போது அடக்கம் செய்ய மட்டும் வந்தாயா? என்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பேசினர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 2 மகன்கள் இருந்தும் முதுமையில் இருந்த பெற்றோரை அவர்கள் கவனிக்காததால், அழுகிய நிலையில் பெற்றோர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×