என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் சிறுமியை கடத்தி திருமணம்- காதல் கணவர் உள்பட 4 பேர் கைது
Byமாலை மலர்27 Oct 2018 8:53 AM GMT (Updated: 27 Oct 2018 8:53 AM GMT)
சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக காதல் கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ChildMarriage
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). இவரது மகள் சக்தி மாரீஸ்வரி. இவர் சூலக்கரையில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் மருளூத்து பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (25) என்பவரும் வேலை பார்த்தார். இவருக்கும், சக்தி மாரீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்த நிலையில் சக்தி மாரீஸ்வரி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை மாரிமுத்து சூலக்கரை போலீசில் புகார் செய்தார்.
அப்போது சக்தி மாரீஸ்வரி மற்றும் வேல்முருகன் ஆஜராகி தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். சக்தி மாரீஸ்வரிக்கு 18 வயது பூர்த்தியாகி விட்டது என சான்றிதழ்களும் ஒப்படைக்கப்பட்டன. இதனை ஏற்று போலீசார் திருமண ஜோடியை அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில் மாரிமுத்து சில ஆதாரங்களுடன் போலீஸ் நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகள் சக்தி மாரீஸ்வரி 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்ததாகவும், அவருக்கு தற்போது 18 வயது ஆகவில்லை என்றும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் வேல்முருகன் மற்றும் சிறுமியை கடத்தி திருமணத்திற்கு உதவியதாக பாண்டியராஜன் (26), நண்பர்கள் சின்ன தாதம்பட்டி பாண்டி (34), ராஜ்குமார் (29), மருளூத்து ராஜேஷ், ஜெயம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த னர்.
சான்றிதழ்களை திருத்தி 18 வயது பூர்த்தியடைந்து விட்டது என அவர்கள் போலீசில் கூறியிருப்பது விசாரணையில் தெரியவந் தது.
இதனைத் தொடர்ந்து வேல் முருகன், பாண்டியராஜன், பாண்டி, ராஜ்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜேஷ் மற்றும் ஜெயத்தை தேடி வருகின்றனர். #ChildMarriage
விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). இவரது மகள் சக்தி மாரீஸ்வரி. இவர் சூலக்கரையில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் மருளூத்து பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (25) என்பவரும் வேலை பார்த்தார். இவருக்கும், சக்தி மாரீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்த நிலையில் சக்தி மாரீஸ்வரி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை மாரிமுத்து சூலக்கரை போலீசில் புகார் செய்தார்.
அப்போது சக்தி மாரீஸ்வரி மற்றும் வேல்முருகன் ஆஜராகி தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். சக்தி மாரீஸ்வரிக்கு 18 வயது பூர்த்தியாகி விட்டது என சான்றிதழ்களும் ஒப்படைக்கப்பட்டன. இதனை ஏற்று போலீசார் திருமண ஜோடியை அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில் மாரிமுத்து சில ஆதாரங்களுடன் போலீஸ் நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகள் சக்தி மாரீஸ்வரி 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்ததாகவும், அவருக்கு தற்போது 18 வயது ஆகவில்லை என்றும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் வேல்முருகன் மற்றும் சிறுமியை கடத்தி திருமணத்திற்கு உதவியதாக பாண்டியராஜன் (26), நண்பர்கள் சின்ன தாதம்பட்டி பாண்டி (34), ராஜ்குமார் (29), மருளூத்து ராஜேஷ், ஜெயம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த னர்.
சான்றிதழ்களை திருத்தி 18 வயது பூர்த்தியடைந்து விட்டது என அவர்கள் போலீசில் கூறியிருப்பது விசாரணையில் தெரியவந் தது.
இதனைத் தொடர்ந்து வேல் முருகன், பாண்டியராஜன், பாண்டி, ராஜ்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜேஷ் மற்றும் ஜெயத்தை தேடி வருகின்றனர். #ChildMarriage
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X