search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி- மனவருத்தத்தில் மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை
    X

    பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி- மனவருத்தத்தில் மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை

    பென்னாகரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தாசம்பட்டி அடுத்துள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் சத்யா (வயது40). மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கடந்த 21-ந்தேதி அன்று இரவு அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் வீட்டில் புகுந்து சத்யா இருக்கும் அறைக்குள் சென்றார். அப்போது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சத்யா சத்தம் போட்டார். உடனே முருகேசன் எழுந்து வந்து ராமசாமியை பிடித்தார். பின்னர் வீட்டிற்கு வெளியில் கொண்டு வந்து பொதுமக்கள் மத்தியில் தர்ம அடி கொடுத்தனர்.

    இதையடுத்து பென்னாகரம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த ராமசாமி மீண்டும் சத்யாவிடம் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த சத்யா நேற்று முன்தினம் வீட்டில் வி‌ஷம் குடித்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சத்யா நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×