search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காடையாம்பட்டி அருகே உதவி தலைமையாசிரியர் பணி மாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
    X

    காடையாம்பட்டி அருகே உதவி தலைமையாசிரியர் பணி மாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

    காடையாம்பட்டி அருகே உதவி தலைமையாசிரியர் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மோரூர் பகுதியில் அரசுமேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

    இந்நிலையில் பள்ளி நிர்வாகம் பூமி பூஜை போட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டாமல் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கட்டிடம் கட்டும் பணியை தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஏன் பூமி பூஜை போட்ட இடத்தில் கட்டிடம் கட்டாமல் பள்ளி குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானத்தில் கட்டிடம் கடடுகின்றீர்கள்? என்று தலைமையாசிரியர் சங்கமித்திரையிடம் கேட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இது குறித்து சரியான பதில் அளிக்காததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனால் கடந்த மாதம் தலைமையாசிரியர் சங்கமித்திரை பணிமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் இந்த சம்பவத்தில் உதவி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் நேற்று பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    உதவி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீவட்டிப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் பள்ளி மாணவர்களை சமாதனப்படுதது முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பள்ளி மாணவர்கள் அவர் வேலைக்கு வரும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள் யாரும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு சொல்ல வராததால் போலீசார் மட்டும் பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×