search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி அருகே ஓரின சேர்க்கை தகராறில் ரெயில்வே ஊழியர் கொலை
    X

    பழனி அருகே ஓரின சேர்க்கை தகராறில் ரெயில்வே ஊழியர் கொலை

    பழனி அருகே ஓரினச்சேர்க்கை தகராறில் ரெயில்வே ஊழியர் படுகொலை செய்யப்பட்டார்.

    பழனி:

    பழனி அருகே உள்ள புதுநகர் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 59). இவர் பழனி ரெயில் நிலையத்தில் கேபிள் மேனாக வேலை பார்த்து வந்தார். திருமணமாக வில்லை. ரெயில்வே குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

    இவரது வீடு கடந்த 2 நாட்களாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் அவர் வெளியூருக்கு சென்றிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் நினைத்தனர். நேற்று இரவு இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

    போலீசார் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது முருகேசன் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், முருகேசன் ஓரினச் சேர்க்கையாளராக இருந்துள்ளார்.

    இவரது வீட்டுக்கு அடிக்கடி வாலிபர்கள் வந்து சென்றுள்ளனர். வீட்டில் மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளனர். எனவே ஓரினச் சேர்க்கையில் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

    மேலும் இவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×