search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று காலை பெண் ஊழியர்கள் சமையல் செய்த போது எடுத்த படம்
    X
    இன்று காலை பெண் ஊழியர்கள் சமையல் செய்த போது எடுத்த படம்

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

    கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும், குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    கோவை மாவட்ட கலெக்டர் அலவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் இன்னாசி முத்து தலைமையில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று மதியம் மற்றும் இரவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து, முன்னாள் மாநில தலைவர் கே.பழனிசாமி, மாவட்ட செயலாளர் என்.பழனிசாமி, நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராஜகோபால், கங்காதேவி, நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று காலையும் சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது:-

    சத்துணவு திட்டம் தொடங்கி 35 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மிகக்குறைவான ஊதியத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே சத்துணவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் 3,200-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    Next Story
    ×