search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
    X

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

    மணக்கோலத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவை சேர்ந்தவர் சோனா (வயது 19). வேலூர் அண்ணாசாலையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.பி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சோனாவும், ஆரணியை சேர்ந்த கார் டிரைவரான வில்லவன் கோதை (24) என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சோனா திடீரென மாயமானார்.

    மகளை கண்டுபிடித்து தரக்கோரி சத்துவாச்சாரி போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். மாணவியை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், மாயமான மாணவி சோனா காதலன் வில்லவன் கோதையை திருமணம் செய்து கொண்டு மணக்கோலத்தில் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார்.

    போலீசாரிடம், பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×