என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழத்தரம் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்26 Oct 2018 11:21 AM GMT (Updated: 26 Oct 2018 11:21 AM GMT)
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேக்காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் சிதம்பரம் போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
சிதம்பரத்தில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டைக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 17 பயணிகள் இருந்தனர்.
சோழத்தரம் அருகே கோதண்டவிளாகம் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது குமாரகுடியை சேர்ந்த வினோத் (22), தேசிங்குராஜன் (22) ஆகியோர் சாலையோரத் தில் நின்று கொண்டு அரசு பஸ்சை நிறுத்தும்படி சைகை காட்டினர்.
ஆனால், அந்த பஸ் அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்தும், தேசிங்குராஜனும் ஓடி சென்று ஏன் பஸ்சை நிறுத்தவில்லை என்று டிரைவரிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
உடனே பஸ்சில் இருந்த பயணிகள் வேகமாக கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக பஸ் டிரைவர் சரவணன் சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பஸ்சை உடைத்த வினோத், தேசிங்குராஜன் ஆகியோர் குமாரக்குடி அருகே உள்ள வாய்க்கால் ஓரம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அங்கு மரத்தடியில் பதுங்கி இருந்த வினோத், தேசிங்குராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேக்காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் சிதம்பரம் போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
சிதம்பரத்தில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டைக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 17 பயணிகள் இருந்தனர்.
சோழத்தரம் அருகே கோதண்டவிளாகம் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது குமாரகுடியை சேர்ந்த வினோத் (22), தேசிங்குராஜன் (22) ஆகியோர் சாலையோரத் தில் நின்று கொண்டு அரசு பஸ்சை நிறுத்தும்படி சைகை காட்டினர்.
ஆனால், அந்த பஸ் அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்தும், தேசிங்குராஜனும் ஓடி சென்று ஏன் பஸ்சை நிறுத்தவில்லை என்று டிரைவரிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
உடனே பஸ்சில் இருந்த பயணிகள் வேகமாக கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக பஸ் டிரைவர் சரவணன் சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பஸ்சை உடைத்த வினோத், தேசிங்குராஜன் ஆகியோர் குமாரக்குடி அருகே உள்ள வாய்க்கால் ஓரம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அங்கு மரத்தடியில் பதுங்கி இருந்த வினோத், தேசிங்குராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X