search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019-ம் ஆண்டுக்குள் மணிமண்டப பணிகள் முடிவடையும்: அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்
    X

    2019-ம் ஆண்டுக்குள் மணிமண்டப பணிகள் முடிவடையும்: அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

    2019‍-ம் ஆண்டுக்குள் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். #SivanthiAditanar #Manimandapam #KadamburRaju
    சென்னை:

    சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டிய அதேநேரத்தில் திருச்செந்தூரில் சிவந்தி அகாடமியில் விழா நடைபெற்றது. விழாவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமை தாங்கினார்.

    விழாவில் மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்ததும் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க இன்று முதல் அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மணிமண்டப பணிகள் வேகமாக நடைபெறும். மணிமண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலை அமைக்கப்படும். 2019‍-ம் ஆண்டுக்குள் மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியதும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழக முதல்-அமைச்சர் கடந்த 22.11.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இம்மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.

    இதனை செயல்படுத்தும் விதமாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்துக்கு இன்று அடிக்கல் நாட்டிய தமிழக முதல்-அமைச்சருக்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    இதைத்தொடர்ந்து மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் அவர்களுக்கு வணக்கம், நான் சிவந்தி ஆதித்தன் பேசுகிறேன். எனது தாத்தா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டியமைக்கு என் இதயப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    இதையடுத்து பா.ஆதவன் ஆதித்தன் நன்றி தெரிவித்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் அவர்களுக்கு வணக்கம், எனது தாத்தா பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டிய முதல்- அமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அடிக்கல் நாட்டப்பட்டதும் காணொலி காட்சியில் மணிமண்டபத்தின் முழு மாதிரி தோற்றம் காட்டப்பட்டது. இதை தொடர்ந்து மணிமண்டபம் கட்டுமான பணிகள் தொடங்கின.

    பொக்லைன் எந்திரம் மூலம் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

    விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கவுரவித்தார்கள்.

    விழாவில் எம்.பி.க்கள் பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, விஜயகுமார், எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வசந்தகுமார், இன்பதுரை.

    திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்த ராஜ், தாசில்தார் தில்லை பாண்டி, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி ஜனார்த்தனன்.


    முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், தட்சணமாற நாடார் சங்க முன்னாள் தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார், பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நெல்லை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் வி.பி.துரை, வக்கீல் காமராஜ், நெல்லை மேற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ், காமராஜர் ஆதித்தனார் கழகம் சிலம்பு சுரேஷ், கருங்கல் ஜார்ஜ்.

    முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ்பாண்டியன், ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் ஜான்பாண்டியன், பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன், நெல்லை தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை, இந்து முன்னணி மாநில தலைவர் அரசு ராஜா, துணைத்தலைவர் ஜெயக்குமார்.

    பா.ஜனதா கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் செல்வராஜ், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், நெல்லை மாவட்ட சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற செயலாளர் தோப்புமணி, துணைத்தலைவர் தர்மர்.

    நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார், முன்னாள் போலீஸ் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் மற்றும் பல்வேறு கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். #SivanthiAditanar #Manimandapam #KadamburRaju
    Next Story
    ×