என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன
Byமாலை மலர்25 Oct 2018 6:26 PM GMT (Updated: 25 Oct 2018 6:26 PM GMT)
காட்பாடியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தது.
வேலூர்:
காட்பாடி சத்யா நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் தச்சுத் தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியா (வயது 24). இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சத்தியா 3-வதாக கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்தியாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 8 மணியளவில் மணிவண்ணன் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது.
அதில் சத்தியாவை ஏற்றிக்கொண்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். ஆம்புலன்சை சரவணன் என்பவர் ஓட்டினார். மருத்துவ உதவியாளர் வித்யா உடனிருந்தார். வீட்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் சத்தியாவுக்கு பிரசவ வலி அதிகமானது.
உடனே ஆம்புலன்சை அங்கேயே நிறுத்தி சத்தியாவுக்கு மருத்துவ உதவியாளர் வித்யா பிரசவம் பார்த்தார். சத்தியாவுக்கு ஆம்புலன்சிலேயே இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டும் பெண் குழந்தைகள்.
உடனடியாக சத்தியாவும், குழந்தைகளும் வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 2 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
காட்பாடி சத்யா நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் தச்சுத் தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியா (வயது 24). இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சத்தியா 3-வதாக கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்தியாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 8 மணியளவில் மணிவண்ணன் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது.
அதில் சத்தியாவை ஏற்றிக்கொண்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். ஆம்புலன்சை சரவணன் என்பவர் ஓட்டினார். மருத்துவ உதவியாளர் வித்யா உடனிருந்தார். வீட்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் சத்தியாவுக்கு பிரசவ வலி அதிகமானது.
உடனே ஆம்புலன்சை அங்கேயே நிறுத்தி சத்தியாவுக்கு மருத்துவ உதவியாளர் வித்யா பிரசவம் பார்த்தார். சத்தியாவுக்கு ஆம்புலன்சிலேயே இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டும் பெண் குழந்தைகள்.
உடனடியாக சத்தியாவும், குழந்தைகளும் வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 2 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X