search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    விழுப்புரத்தில் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    விழுப்புரம், 

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    மயிலத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் விற்பனையாளர் திருவேங்கடம், அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் ஏட்டு இளையராஜா ஆகியோரை வெட்டிவிட்டு பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேரடியாக சென்று வங்கி அதிகாரிகள் பணம் வசூலிப்பதைபோல் கிராமப்புற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் வங்கி அதிகாரிகள் சென்று பணம் வசூலிக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் கோபிநாத், நீர்தேக்க தொட்டி பணியாளர் சங்க மாநில தலைவர் வீரப்பன், டாஸ்மாக் பணியாளர் சங்க பிரசார செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
    Next Story
    ×