search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருதுபாண்டியர் நினைவு தினம் - ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
    X

    மருதுபாண்டியர் நினைவு தினம் - ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

    மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #MaruthuPandiyar
    திருப்பத்தூர்:

    சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 217-ம் ஆண்டு நினைவுதினம் திருப்பத்தூரில் நேற்று அரசு விழாவாக நடைபெற்றது. இதையொட்டி மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர் ராமசாமி தலைமையில் மணிமண்டபம் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டது. இதைதொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.காமராசு, ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன், மணிகண்டன் ஆகிய 7 அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கோகுல இந்திரா, பி.ஆர். செந்தில்நாதன் எம்.பி., சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆவின் தலைவர் கே.ஆர்.அசோகன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



    முன்னதாக திருப்பத்தூர் வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளர் இப்ராம்ஷா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.நாகராஜன், கரு.சிதம்பரம், புதுத்தெரு முருகேசன், வக்கீல் ராஜசேகர், ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, ஜெயலலிதா பேரவை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    மேலும் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தி.மு.க. மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பள்ளத்தூர் ரவி, கே.எஸ்.நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், மாணிக்கம், நெடுஞ்செழியன், நகர செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புராம், ராம.அருணகிரி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், பாபா அமீர்பாதுஷா, வட்டார தலைவர் பன்னீர்செல்வம், நகர தலைவர் திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், பாண்டியன், கோட்டையிருப்பு கலைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நடிகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர், மாணவ-மாணவிகள், சமுதாய பிரமுகர்கள் கலந்துகொண்டு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    Next Story
    ×