search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குடி-லாலாப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர்-வாலிபர் பலி
    X

    ஆலங்குடி-லாலாப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர்-வாலிபர் பலி

    ஆலங்குடி- லாலாப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் முதியவர் மற்றும் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). இவர் கடந்த 17-ந் தேதி ஆலங்குடியிலிருந்து சைக்கிளில் வீடு திரும்பினார். பாப்பான்விடுதி பஸ்நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் மீதுமோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. 

    இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை சிகிச்சைக்காக  தஞ்சாவூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக  இறந்தார். 

    இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய நபரை தேடி வருகிறார்கள்.  

    லாலாபேட்டை அடுத்த பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் (38) இவர் தொட்டியத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். கடந்த 19-ம் தேதி லாலாபேட்டையில் இருந்து அய்யர் மலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். லாலாப்பேட்டை பாலப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கொம்பாடிபட்டியைச் சேர்ந்த அருண் (25) என்பவர் செந்தில் மீது மோதினார். 

    இந்த விபத்தில் செந்திலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் செந்திலை மீட்டு சிகிச் சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று செந்தில் இறந்தார். 

    இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அருணை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×