என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் 2-வது நாளாக டெங்கு ஆய்வு- மெக்கானிக் கடைக்காரருக்கு ரூ.1000 அபராதம்
Byமாலை மலர்25 Oct 2018 12:27 PM GMT (Updated: 25 Oct 2018 12:27 PM GMT)
திருவாரூரில் 2-வது நாளாக நடந்த டெங்கு ஆய்வில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை அகற்றதாக மெக்கானிக் கடைக்காரருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.#DenguFever
திருவாரூர்:
தமிழகம் முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத்துறை, வருவாய்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி தலைமையில் திருவாரூர் நகரத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளைக் கண்டறிந்து அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று 2-வது நாளாக திருவாரூர் பழைய ரெயில்வே நிலைய சாலை, வாழ வாய்க்கால், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் கடைகளை பார்வையிட்டு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை அகற்ற சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி அறிவுறுத்தினார்.
மேலும் மெக்கானிக் கடைக்காரருக்கு ஒன்றுக்கு ஆயிரம் அபராதம் விதித்தார். நேற்று தொடங்கி நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை சுமார் 5 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் நகரம் முழுவதும் இதுபோன்று டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் குப்பைகளையும் தண்ணீரையும் தேக்கி வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி தெரிவித்தார். #DenguFever
தமிழகம் முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத்துறை, வருவாய்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி தலைமையில் திருவாரூர் நகரத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளைக் கண்டறிந்து அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று 2-வது நாளாக திருவாரூர் பழைய ரெயில்வே நிலைய சாலை, வாழ வாய்க்கால், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் கடைகளை பார்வையிட்டு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை அகற்ற சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி அறிவுறுத்தினார்.
மேலும் மெக்கானிக் கடைக்காரருக்கு ஒன்றுக்கு ஆயிரம் அபராதம் விதித்தார். நேற்று தொடங்கி நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை சுமார் 5 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் நகரம் முழுவதும் இதுபோன்று டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் குப்பைகளையும் தண்ணீரையும் தேக்கி வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி தெரிவித்தார். #DenguFever
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X