search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்- 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது
    X

    சத்துணவு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்- 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    வரையறுக்கப்பட்ட ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    போராட்டம் நடைபெற இருந்த ஆஞ்சநேயர் கோவில் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே அங்கு திரண்ட சத்துணவு ஊழியர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுந்தரம்மாள், மாநில செயலாளர் ஆண்டாள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண் சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×