search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    த.மா.கா. 5-ம் ஆண்டு தொடக்க விழா: ஜிகே வாசன் அறிக்கை
    X

    த.மா.கா. 5-ம் ஆண்டு தொடக்க விழா: ஜிகே வாசன் அறிக்கை

    வருகின்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று 5ஆம் ஆண்டில் த.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    த.மா.கா. 4 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து அடுத்த மாதம் 5-ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது. த.மா.கா.வின் தொடர் வெற்றிப் பயணத்திற்கு காரணம் இயக்கத்தின் தலைவர் முதல், மூத்த துணைத் தலைவர், மூத்த முன்னணித் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரின் தொடர் இயக்கப் பணிகளும், மக்கள் பணிகளும்தான்.

    அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று 5ஆம் ஆண்டில் த.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது.

    5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது. மூத்த துணைத் தலைவர், மூத்த முன்னணித் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

    நேர்மையான, தூய்மையான மக்கள் பணி தொடர அனைவரது நல்லாதரவையும் வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.  #TamilMaanilaCongress #GKVasan
    Next Story
    ×