search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவறு செய்யாத எங்களுக்கு தகுதி நீக்க தண்டனையா?- தங்க தமிழ்ச்செல்வன்
    X

    தவறு செய்யாத எங்களுக்கு தகுதி நீக்க தண்டனையா?- தங்க தமிழ்ச்செல்வன்

    தவறு செய்யாத தங்களுக்கு தகுதி நீக்க தண்டனையா? என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். #18mlascaseverdict #ThangaTamilselvan
    சென்னை:

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

    முதலில் கோர்ட்டு தீர்ப்பை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுகிறேன். அடுத்ததாக மறைந்த எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் வக்கீல், நீதிபதி குறித்து கருத்து கேட்டபோது 25 வருடமாக பொய்யே பேசி வாதாடிய வக்கீல் நீதிபதியானால் பொய்யை தவிர எதை சொல்வார் என்று சொல்வார்.

    இப்போது நானும் அதையே நினைத்து பார்க்கிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. கொறடா உத்தரவையும் மீறவில்லை. தவறு செய்யாத நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறோம். ஆனால் தவறு செய்த ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் துணை முதல்-அமைச்சராகவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். நீதித்துறை தடம் மாறினால் நாடு கெட்டு போகும்.


    தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? அல்லது மக்களை சந்திப்பதா? என்பது குறித்து கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் இன்று இரவு மதுரையில் ஆலோசனை நடத்துகிறோம். இது பற்றி அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #18mlascaseverdict #ThangaTamilselvan
    Next Story
    ×