search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14,200 கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14,200 கனஅடியாக அதிகரிப்பு

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 14,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்தது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 14,200 கனஅடியாக அதிகரித்து வந்துள்ளது.

    இதனால் மெயின் அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். #Hogenakkal

    Next Story
    ×