search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாப்பாரப்பட்டி அருகே விபத்து: கூலி தொழிலாளி பலி
    X

    பாப்பாரப்பட்டி அருகே விபத்து: கூலி தொழிலாளி பலி

    பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஏ.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பெருமாள் (வயது 31), கூலி தொழிலாளி. மேலும் இவர் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று பால் கரந்து கொடுப்பார். நேற்று மாலை வீட்டில் இருந்து பால் கரக்க மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    வீட்டில் இருந்து 100 அடி தூரத்தில் இந்த விபத்து நடந்து அவர் பலியானதை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்தில் இறந்த பெருமாளுக்கு முனியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
    Next Story
    ×