என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பாரப்பட்டி அருகே விபத்து: கூலி தொழிலாளி பலி
Byமாலை மலர்24 Oct 2018 4:38 PM GMT (Updated: 24 Oct 2018 4:38 PM GMT)
பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஏ.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பெருமாள் (வயது 31), கூலி தொழிலாளி. மேலும் இவர் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று பால் கரந்து கொடுப்பார். நேற்று மாலை வீட்டில் இருந்து பால் கரக்க மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
வீட்டில் இருந்து 100 அடி தூரத்தில் இந்த விபத்து நடந்து அவர் பலியானதை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்தில் இறந்த பெருமாளுக்கு முனியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X