search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஞ்சுகிராமம் அருகே பிளஸ்-2 மாணவர் மாயம்
    X

    அஞ்சுகிராமம் அருகே பிளஸ்-2 மாணவர் மாயம்

    அஞ்சுகிராமம் அருகே டியூசனுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாணவரை தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் சிதம்பர நாதன்நகர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் மூர்த்தீஸ்வரன் (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து டியூசனுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் இல்லாததால் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×