search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க தமிழ்ச்செல்வன் நடைபயிற்சி மேற்கொண்ட போது எடுத்தபடம்.
    X
    தங்க தமிழ்ச்செல்வன் நடைபயிற்சி மேற்கொண்ட போது எடுத்தபடம்.

    முதலமைச்சரை மாற்றி விட்டு ஆட்சியை தொடருவோம்- தங்க தமிழ்ச்செல்வன்

    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் முதலமைச்சரை மாற்றி விட்டு ஆட்சியை தொடருவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase #ThangaTamilselvan
    தென்காசி:

    தமிழக சட்டமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் திடீரென அங்கிருந்து ஐந்தருவியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கிசுப்பையாவின் மற்றொரு சொகுசு விடுதிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். ஐந்தருவியில் உள்ள விடுதியில் தங்கியுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இங்கு தான் இருப்போம். தீர்ப்பு வந்த பின்னர் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரனை சந்திப்போம். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து வருகிற 10-ந்தேதி ஆண்டிப்பட்டி தொகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து மற்ற 16 தொகுதிகளிலும் நடக்கும். இறுதியாக ஆர்.கே. நகரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். எங்களுக்கு ஆதரவாக மேலும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள். வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் சில அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றிவிட்டு புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுத்து ஆட்சியை தொடருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase #ThangaTamilselvan
    Next Story
    ×